சென்னை: இந்தி மொழியைப் பயன்படுத்தினால்தான் நாடு முன்னேறும் எனக் கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இவ்வாறு பேசுவது தவறு என்றும் இனி இப்படிப் பேசக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இந்தியர்கள் அனைவரும் நாட்டின் அலுவல் மொழியான இந்தியுடன் தங்களது தாய்மொழியையும் இணைத்துப் பயன்படுத்துவதில்தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கி உள்ளது என்றார்.
இதை ஏற்க இயலாது என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
"தமிழ் உள்பட, நாட்டில் பயன்படுத்தப்படும் 22 மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. அதை உடனே நிறைவேற்றி, மொழி சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

