'ஃபுளாரன்ஸ் ைநட்டிங்கேல்' விருது ெபற்ற மூன்று தாதியர்

'ஃபுளாரன்ஸ் ைநட்டிங்கேல்' விருது ெபற்ற மூன்று தாதியர்

1 mins read
65075b6b-3024-4765-af2b-1ede7b4659b0
இடமிருந்து: ஓ.வி.உஷா, ஜி.மணி மேகலை, எஸ். வேளாங் கன்னி. படங்கள்: ஊடகம் -

சென்னை: தமி­ழத்­தைச் சேர்ந்த தாதி­யர் மூவ­ருக்கு அதி­பர் ராம்­நாத் கோவிந்த் 'ஃபுளாரன்ஸ் நைட்­டிங்­கேல்' விருதை வழங்கி கௌர­வித்­துள்­ளார்.

தாதி­ய­ரின் நீண்­ட­காலச் சேவை, முகம் சுளிக்­காத கவ­னிப்பு, அர்ப்­பணிப்பு உணர்வை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் அவர்களுக்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்டு உள்ளது.

இந்­தி­யா­வில் உள்ள அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் சிறந்த முறை­யில் பணி­யாற்­றும் தாதி­யரைக் கௌர­விக்கும் வகையில், ஆண்டுதோறும் 'ஃபுளாரன்ஸ் நைட்­டிங்­கேல்' விருதை மத்­திய சுகா­தா­ரத் துறை வழங்கி வரு­கிறது.

அதன்­படி, கடந்த 2020ஆம் ஆண்­டுக்­கான விருது தமி­ழ­கத்­தின் மூன்று பேர் உள்­பட 51 தாதி ­யருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் அரசு புற­ந­கர் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் தாதி ஓ.வி.உஷா, எழும்­பூர் அரசு குழந்­தை­கள் நல மருத்­துவ­மனை தாதி ஜி.மணி­மே­கலை, விழுப்­பு­ரம் மாவட்­டம், சிறு­வந்­தாடு ஆரம்ப சுகா­தார நிலைய தாதி எஸ்.வேளாங்­கன்னி ஆகிய மூவ­ருக்­கும் காணொளி வழி நடை­பெற்ற விழா­வில் அதி­பர் விருதை வழங்­கி­னார்.

'கை விளக்­கேந்­திய காரிகை' என்று உலக மக்­க­ளால் போற்­றப்­படும் 'ஃபுளாரன்ஸ் நைட்­டிங்­கேல்' அம்­மை­யார், தாதி­யர் சேவை­யின் முன்­னோடியாகத் திகழ்ந்தவர்.

கடந்த 32 ஆண்­டு­க­ளாக ஆயி­ரத்­துக்­கும் மேற்பட்ட பிர­ச­வங்­க­ளைப் பார்த்துள்ளேன். இது­வரை ஒரு ­இ­றப்­பு­கூட நேர்ந்ததில்லை. 'ஃபுளாரன்ஸ்­ நைட்­டிங்­கேல்' அம்­மை­யார் பெயரில் ­

வி­ரு­து பெ­று­வது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. இதுவே எனது வாழ்­நாள் சாத­னை­.

தாதி ஓ.வி. உஷா