தனித்துப் போட்டியிடும் மநீம, நாம் தமிழர் கட்சி

1 mins read
1019900c-9a68-4367-9fe5-186fbffe8ffd
-

சென்னை: ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லில் தேமுதிக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லில் தனித்­துப் ­போட்­டி­யி­டு­வ­தாக தேமு­திக பொதுச் செய­லா­ளர் விஜ­ய­காந்த்தும் அதிமுகவில் இருந்து விலகி தனித்துப் போட்டி யிடப் போவதாக பாமகவும் ஏற்கெனவே அறி­வித்துவிட்டன.

இந்நிலையில், கமல்­ஹாசன் தலை­மை­யி­லான மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யும் தனித்­துப்­போட்டி­யிடத் திட்­ட­மிட்­டுள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன. இன்னும் இரு தினங்­களில் உறுதி செய்­யப்­பட்ட வேட்­பா­ளர் பட்­டி­யலை வெளி­யிட்டு கமல்­ஹா­சன் தேர்­தல் பரப்­புரை மேற்­கொள்ள இருப்­ப­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

உள்­ளாட்­சித் தேர்­த­லில் நாம் தமி­ழர் கட்சி தனித்­துப் போட்­டி­யி­டும் என கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் அறி­வித்­துள்­ளார். இத்தேர்­த­லில் மக்­க­ளை­யும் உன்­ன­த­மான தத்­து­வத்­தை­யும் நம்பி தனித்து கள­மி­றங்­கு­வ­தாக அவர் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.