ஏடிஎம் இயந்திரத்துடன் ரூ.4 லட்சம் சூறை

ஏடிஎம் இயந்திரத்துடன் ரூ.4 லட்சம் சூறை

1 mins read
e10b2b62-5730-4f15-981a-297c37b33772
-

அரக்­கோ­ணம்: அரக்­கோ­ணம் அருகே ஏடி­எம் இயந்­தி­ரத்­து­டன் பணத்­தைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்ற திரு­டர்­க­ளைப் பிடிக்கும் பணியில் ஆறு தனிப்­படை போலி­சார் ஈடுபட உள்­ள­னர்.

போலி­சா­ரின் முதல்கட்ட விசார­ணை­யில் ரூ.4 லட்­சம் பணம் கொள்ளை போன­து அம்­பலமானது. ராணிப்­பேட்டை மாவட்­டம், பெருங்­க­ளத்­தூ­ரில் தனி­யார் வங்­கி­யின் ஏடி­எம் மையம் உள்­ளது. இங்­குள்ள இயந்­தி­ரத்­தில் நேற்று முன்­தி­னம்­தான் வங்கி அலு­வ­லர்­கள் ரூ.8.5 லட்­சம் பணத்தை நிரப்­பி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று காலை இந்த ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் பணம் எடுக்­கச் சென்­ற­வர்­கள் அங்­குள்ள இயந்­தி­ரம் காணா­மல் போயி­ருந்­த­தைக் கண்டு அதிர்ந்­த­னர்.

"ஏடி­எம் இயந்­தி­ரத்­தின் பக்­கவாட்டு சுவ­ரில் துளையிட்டு, பேட்­ட­ரி­யில் இயங்­கும் ரம்­பம், 'வெல்­டிங் ெமஷின்' கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி இயந்­தி­ரத்­தின் உள்ளே உள்ள பணப்பெட்­டியைக் கொள்­ளை­யர்­கள் களவாடிச் சென்­றது ெதரியவந்தது.

"ஒதுக்­குப்­பு­ற­மாக அமைந்­துள்ள இந்த ஏடி­எம் மையத்­தில் காவலாளி­கள் யாரு­மில்லை. இரவு நேரத்­தில் யாரும் அதிகம் வர­மாட்­டார்­கள் என்பதால் இந்த திருட்டு நடந்துள்ளது. கொள்­ளை­யர்­கள் அங்­கி­ருந்த சிசி­டிவி கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளை­யும் உடைத்­துள்­ள­னர். பாதுகாப்பாக இருந்த ஒரு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வரு கிறோம்," என்று அரக்­கோ­ணம் போலி­சார் கூறியுள்ளனர்.