சென்னை: நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை என ஒரு வழக்கின் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் முன்னி லையான வழக்கறிஞர் விளக்கம் கூறியுள்ளார்.
நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போன்றே பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் 365 நாள்கள் (ஓராண்டு காலம்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து கடந்த 2016ல் அரசு ஆணை பிறப்பித்தது.
இச்சலுகை தற்காலிகப் பணியாளர்களுக்கும் 2020ல் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், "இந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை. பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிகப் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லை. அவர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும்," என்று ராஜகுரு என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

