லாரியின் முன் படுத்துக்கொண்டு நீதி ேகட்டு பெண் போராட்டம்

லாரியின் முன் படுத்துக்கொண்டு நீதி ேகட்டு பெண் போராட்டம்

1 mins read
1388535f-d51d-4137-9b90-eff7533829d1
தண்ணீர் லாரி முன் படுத்துக்கொண்டு நியாயம் கேட்ட பெண். படம்: ஊடகம் -

திருத்­து­றைப்­பூண்­டி­: அரசுப் புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக 'போர்' போட்டு, தண்­ணீரை லாரியில் பிடித்துச் சென்று, வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த ஆடவர்கள் குறித்து காவல்­நிலை­யத்­தில் அதி­முக நிர்­வாகி சுரேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, வீட்­டில் இருந்து வெளியே வந்த சுரேஷ்­கு­மார் மீது மர்ம நபர்­கள் சிலர் மாட்டுச் சாணத்தை வீசி­ தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, மர்ம நபர்­கள் மீது நட­வடிக்கை எடுக்­கக்கோரி சுரேஷ்­கு­மார் மறி­ய­லில் ஈடு­பட்­ட­தால் போக்கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. சுரேஷ்­குமா­ரின் தங்கையும் லாரி முன் படுத்­துக்கொண்டு நியாயம் கோரி மறி­ய­ல் செய்தார்.

திரு­வா­ரூர் மாவட்­டம், திருத்­து­றைப்­பூண்­டி­யில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதி­முக வழக்­க­றி­ஞர் பிரிவு மாவட்ட இணைச் செய­லா­ள­ராக இருந்து வரு­ம் சுரேஷ்குமார், தண்­ணீர் ஏற்றி வந்த லாரியை மடக்கி போலி­சில் ஒப்­ப­டைத்­தார்.

இதனால் எரிச்சலடைந்த சந்தேக நபர்­கள், சுரேஷ்­கு­மார் மீது மாட்டுச் சாணத்தை வீசி­யெ­றிந்து தாக்­கு­தல் நடத்தியுள்ளனர்.