சென்னை: தமிழக பொதுத்துறையின் கணினி அமைப்புக்குள் சிலர் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது.
அத்து மீறியவர்கள் தங்களுக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர் தர வேண்டும் என்றும் அப்போதுதான் மீண்டும் பொதுத்துறை கணினி அமைப்பு அரசு வசம் ஒப்படைக்கப்படும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.
உரிய பாதுகாப்பு, இணைய வழியான தாக்குதல்களை முறியடிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாததே இந்த ஊடுருவலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பொதுத்துறை கணினி அமைப்பை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல முக்கிய கோப்பு களை ஊடுருவல்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அவற்றில் பல முக்கிய பிரமுகர்களின் தமிழக வருகை, அவர்களுக்காக செய்யப்படும் ஏற்பாடுகள் தொடர்பானவை எனக் கூறப்படுகிறது.