விழுப்புரம்: செஞ்சி அருகே ஊராட்சித் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
செஞ்சி ஒன்றியத்தில் உள்ள பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை மங்கை என்பவர் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதாக துத்திப்பட்டு கிராம மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். இதையடுத்து ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

