முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்பு அழைப்பு: காங்கிரஸ் ஆதரவு

முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்பு அழைப்பு: காங்கிரஸ் ஆதரவு

1 mins read
569c32d1-9b48-4f60-8699-49935b282caa
-

சென்னை: விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­கள் எதை­யுமே பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு இது­வரை நிறை­வேற்­ற­வில்லை என தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அர­சைக் கண்­டித்து ஐக்­கிய விவ­சா­யி­கள் முன்­னணி நடத்­தும் முழு அடைப்­புப் போராட்­டம் வெற்­றி­பெற காங்­கி­ரஸ் கட்சி துணை நிற்­கும் என அறிக்கை ஒன்­றில் அவர் சாடி உள்­ளார்.

"விவ­சா­யி­க­ளுக்கு விரோ­த­மான மூன்று வேளாண் சட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­பாக விவ­சாய சங்­கங்­க­ளையோ, விவ­சா­யி­க­ளையோ, எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளையோ மத்­திய அரசு அழைத்து ஆலோ­சிக்­க­வில்லை.

"கடந்த பத்து மாதங்­க­ளா­கத் தலை­ந­கர் டெல்­லி­யில் விவ­சா­யி­கள் தொடர்ந்து போராட்­டம் நடத்தி வரு­கி­றார்­கள். அவர்­களை அழைத்­துப் பேசு­வ­தற்­கும் பிர­த­மர் மோடி தயா­ராக இல்லை," என கே.எஸ்.அழ­கிரி தெரி­வித்­துள்­ளார்.

விவ­சா­யி­கள் மீது பிர­த­மர் மோடி எந்த அள­வுக்­குக் கடு­மை­யான மன­நி­லை­யோடு இருக்­கி­றார் என்­ப­தற்கு இதை­விட வேறு சான்று தேவை­யில்லை என்று குறிப்­பிட்ட அவர், மூன்று வேளாண் சட்­டங்­களும் பெரு நிறு­வ­னங்­க­ளின் நலன்­க­ளுக்­கா­கத்­தான் கொண்டு வரப்­பட்­டன என்­பது இப்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சாடி­யுள்­ளார்.

"நெஞ்­சு­று­தி­யோடு தலை­ந­கர் டெல்­லி­யில் விவ­சா­யி­கள் போராடி வரு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு ஆத­ர­வா­கக் குரல் கொடுக்க வேண்­டிய கட­மை­யும் பொறுப்­பும் தமிழக விவ­சா­யி­க­ளுக்­கும் அர­சி­யல் கட்சி­க­ளுக்­கும் இருக்­கிறது," என்று கே.எஸ்.அழ­கிரி கூறி­யுள்­ளார்.

ஐக்­கிய விவ­சா­யி­கள் முன்­னணி செப்­டம்­பர் 27ஆம் தேதி நாடு தழு­விய அள­வில் முழு அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.