கோவை: கோவையில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவியர்க்கு சுழற்சி முறையில் கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
அங்கு அனைத்து கல்வி மையங்களையும் கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் தலைமையில் ஆங்காங்கே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில் உள்ளவர்கள் கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்கிறார்கள். தினமும் சுமார் 700 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் நிலையில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் தினமும் ஆறாயிரம் பேருக்கு பரிசோதனை நடக்கிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,669 பேருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மொத்தம் 1,600 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

