ஆளுநர்: இயன்ற வகையில் மக்களுக்கு சேவையாற்றுவேன்

ஆளுநர்: இயன்ற வகையில் மக்களுக்கு சேவையாற்றுவேன்

2 mins read
1af90e4b-73a8-4f32-bd2d-087a1e993a45
(இடமிருந்து வலம்) பதவியேற்பு விழாவில் நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி. படம்: தமிழக தகவல் ஊடகம் -

'கொரோனா தொற்று நெருக்கடியை தமிழக அரசு திறமையாகக் கையாண்டுள்ளது'

சென்னை: தமி­ழக மக்­க­ளின் முன்­னேற்­றத்துக்கு தம்­மால் இயன்ற அளவு உழைக்­கப் போவதா­க­வும் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு உட்­பட்டு தமி­ழக மக்­க­ளுக்கு சேவை­யாற்­றப் போவ­தா­க­வும் தமிழ­கத்­தின் புதிய ஆளு­நர் ஆர்.என்.ரவி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று ஆளு­ந­ரா­கப் பொறுப்­பேற்­றுக்கொண்ட அவர், தமது செயல்­பா­டு­கள் தமி­ழக மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றும் வகை­யில் இருக்­கும் என்­றார்.

உல­கின் தொன்­மை­யான நாகரி­கத்­தைச் சேர்ந்த மக்­கள் வாழும் தமி­ழ­கத்­தின் ஆளு­ந­ராக பதவி ஏற்­றுள்­ளது மகிழ்ச்சி அளிக்­கிறது என்­றும் தமி­ழில் பேச கற்று வரு­வ­தா­க­வும் புதிய ஆளு­நர் கூறி­னார்.

நேற்று பத­வி­யேற்­றுக் கொண்ட கையோடு சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார் ஆளு­நர் ரவி. பொது­வாக ஆளு­நர்­கள் செய்தி­யா­ளர்­க­ளைச் சந்­திப்­பது மரபு அல்ல. ஆனால் முதல் நாளே செய்­தி­யா­ளர் சந்­திப்பை நடத்­தி­னார் ஆளு­நர் ரவி.

அப்­போது எழுப்­பப்­பட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த அவர், தாம் பத­வி­யேற்று சில நிமி­டங்­கள்­தான் ஆகின்­றன என்­றும் எதிர்­கால நட­வ­டிக்­கை­கள் குறித்து இப்­போது ஏதும் தெரி­விக்க இய­லாது என்­றும் கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் மக்­க­ளால் தேர்வு செய்­யப்­பட்ட அரசு ஆட்­சி­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், தமி­ழக அர­சின் ஒட்­டு­மொத்த செயல்­பாடு குறித்து விரி­வாக கருத்து தெரி­விக்க கால அவ­கா­சம் தேவைப்­படும் என்­றார்.

அர­சின் பல்­வேறு பொறுப்­பு­களை வகித்த அனு­ப­வம் தமக்கு இருப்­ப­தா­க­வும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்­கும் ஆளு­நர் பதவிக்கான விதி­க­ளுக்கு உள்­பட்­டும் தமி­ழ­கத்­தின் முன்­னேற்­றத்­துக்கு தமது பங்­க­ளிப்பை தர இருப்­ப­தா­க­வும் புதிய ஆளு­நர் கூறி­னார்.

"கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் அனை­வ­ரும் இணைந்து பணி­யாற்­று­வது அவ­சி­யம். தமி­ழக அரசு கொரோனா நெருக்­க­டியை எதிர்­கொள்­வ­தில் திறம்­பட செயல்­பட்­டுள்­ளது. தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்தி உள்­ளது," என்று பாராட்­டி­னார் ஆளு­நர் ரவி.

முன்­ன­தாக நேற்று காலை நடை­பெற்ற பத­வி­யேற்பு நிகழ்­வில், ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி சஞ்­சீவ் பானர்ஜி பத­விப்­பி­ர­மா­ணம் செய்து வைத்­தார். இதில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.