உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; ரகசிய கூட்டத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; ரகசிய கூட்டத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் முடிவு

2 mins read
93af011a-e4af-4e60-b5e5-9e5415879b7b
-

சென்னை: தென்னிந்தியாவின் பிரபல நடி­க­ரான விஜய்­யின் 'விஜய் மக்­கள் இயக்­கம்' ரக­சியக் கூட்­டம் நடத்தி உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட முடிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

நடி­கர் விஜய்­யின் ரசி­கர் மன்றங்­கள் விஜய் மக்­கள் இயக்­க­மாக செயல்­பட்டு வரு­கின்­றன.

ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கான ஊரக உள்­ளாட்சித் தேர்­தல் அடுத்த மாதம் 6, 9 தேதி­களில் இரு கட்டங்­ க­ளாக நடை­பெறுகிறது. இந்­தத் தேர்­த­லில் விஜய் மக்­கள் இயக்­கம் போட்­டி­யிட இருப்­ப­தாக கூறப்­பட்­டது.

இதன் தொடர்­பில் விஜய் ரசி­கர்­களும் சமூக ஊட­கங்­களில் கருத்­து­களை வெளி­யிட்டு வந்­த­னர்.

இந்த நிலை­யில் உள்­ளாட்சித் தேர்­த­லில் விஜய் மக்­கள் இயக்­கம் போட்­டி­யி­ட­லாமா, வேண்­டாமா? என்­பது குறித்து முடிவு செய்ய சனிக்­கி­ழமை அன்று நிர்­வா­கி­கள் கூட்­டம் நடந்­தது. சென்­னையை அடுத்த பனை­யூ­ரில் உள்ள விஜய் மக்­கள் இயக்கத் தலைமை அலு­வ­ல­கத்­தில் இந்­தக் கூட்­டம் ரக­சி­ய ­மாக நடந்­தது.

இந்தக் கூட்­டத்­துக்கு விஜய் மக்­கள் இயக்க மாநில பொறுப்­பா­ளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்­கி­னார். இதில் விஜய் மக்­கள் இயக்­கத்தைச் சேர்ந்த 20 மாவட்டத் தலை­வர்­கள் கலந்துகொண்­ட­னர்.

அப்­போது, வரு­கிற உள்­ளாட்­சித் தேர்­த­லில் விஜய் மக்­கள் இயக்­கம் போட்­டி­யி­டு­வது என்று முடிவு செய்­யப்­பட்­டது.

பின்­னர் பேசிய புஸ்ஸி ஆனந்த், "பஞ்­சா­யத்து தேர்­த­லில் விஜய் மக்­கள் இயக்­கம் போட்­டி­யி­டு­வது என்று முடிவு செய்­யப்­பட்டு இருக்­கிறது," என்­றார்.

அதே வேளையில் உள்­ளாட்சித் தேர்­த­லில் போட்­டி­யி­டும் நிர்­வா­கி­கள் கட்சிக் கொடி­யை­யும் தனது புகைப்­ப­டத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள விஜய் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இதுகுறித்து அதி காரபூர்வமான அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.