சென்னை: அதிமுகவில் ஒருங் கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளரின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிய மனப் பதவிகளுக்கான தீர் மானத்தை ஏற்று அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றதில் தவறில்லை," எனக் கூறி ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் பதவிகளுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப் பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனம் குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு, அக்கட்சியில் இனி பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் நியமனப் பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்ெகாண்டு அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நியமனம் பற்றிய தேர்தல் ஆணைய உத்தரவு செல்லும் என்று தெரிவித்துள்ளது. அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோருக்கு சாதக மாகியுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.

