தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாநிலம் முழுவதும் திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கறுப்புக்கொடி போராட்டம்

2 mins read
943487f3-1a34-4f8b-8490-16c85fc90715
-

சென்னை: மத்­திய அரசு மக்­க­ளின் நலன்­க­ளுக்கு விரோ­த­மா­கச் செயல் ­ப­டு­வ­தா­கக் கூறி, அத­னைக் கண்­டிக்­கும் வகை­யில் தமி­ழ­கம் முழு­வ­தும் திமுக, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கூட்­ட­ணிக் கட்­சி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டன.

இந்­தப் போராட்­டம் நேற்­றில் இருந்து 11 நாட்­க­ளுக்கு நடத்­தப்­பட உள்­ள­தா­க­வும் இக்கூட்­ட­ணிக் கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன.

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடு வதைத் தவிர்க்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்கள் வீடுகளின் முன்பு கறுப்­புக்­கொடி ஏற்றி போராட்­டம் நடத்தி வருகின்­ற­னர்.

மத்திய பாஜக மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு, நீட்­தேர்­வுக்கு விலக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட அம்சங் களை முன்னிறுத்தி திமுக தலைமை யி­லான கூட்­ட­ணிக் கட்­சி­கள் நேற்று கறுப்­புக்கொடி­களை ஏந்தி போராட்­டம் நடத்­தி­ன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி தலை­மை­யில் காணொளி வழி நடைெபற்ற கூட்­டத்­தில், மத்­திய அர­சின் நடவடிக்­கை­க­ளைக் கண்­டித்து செப்­டம்­பர் 20 முதல் 11 நாட்­க­ளுக்கு போராட்­டம் நடத்த எதிர்க்­கட்­சி­கள் முடி­வெ­டுத்­தன.

அதன்­படி, நேற்று முதல் தொட ரும் இப்போராட்­டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தேனாம்­பேட்­டை­யில் திமுக இளை­ஞ­ரணி அலு­வ­ல­க­மான அன்­ப­கத்­தில் உத­ய­நிதி ஸ்டா­லின், சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் ஆ.ராசா, டிகே­எஸ் இளங்­கோ­வன் உள்­ளிட்­டோர் கறுப்புக்கொடி போராட்­டம் நடத்தினர்.