அக்டோபருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி

அக்டோபருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி

2 mins read
18e614dd-9961-4615-b864-fcd232f3b9c9
சென்னை ரயில்நிலையத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 சிறப்பு முகாமில், பயணி ஒருவருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுவிடும் சுகாதார ஊழியர். படம்: ஏஎஃப்பி -

சேலம்: தமிழகத்தில் ஒரே நாளில் இரண்­டாம் கட்­ட­மாக நடத்­தப்­பட்ட மாபெ­ரும் தடுப்­பூசி முகா­மில் 16 லட்­சத்து 43 ஆயி­ரத்து 879 பேருக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

எட்டு கோடி மக்­கள் தொைக யைக் கொண்ட மாநிலத்தில், இது­வரை 4 கோடிக்­கும் அதி­க­மா­னோ ருக்குத் தடுப்­பூ­சி போடப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.

சேலத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "தமி­ழ­கத்­தில் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு கவ­னம் செலுத்தி வரு­கிறது. இதற்­காக, 18 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி செலுத்­தும் பணி முடுக்கி விடப்­பட்டு உள்­ளது.

கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் அனை வரின் எண்ணமாக உள்ளது. அப்படியே, ஒரு வேளை இந்த அலை வந்தாலும் அதையும் சமாளிப்பதற்குத் தமிழக அரசு தயாராகவே உள்ளது," என்றார்.

கடந்த 12ஆம் தேதி முதல் கட்டமாக நடந்த மாபெரும் தடுப்­பூசி முகாமில் ஏறத்தாழ 29 லட்­சம் பேருக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.

இந்நிலையில், தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் குறைந்­தா­லும் மூன்றாவது அலை தொடங்­க­லாம் என்ற அச்சம் இருப்பதாக நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

இந்தக் கிருமியை அதி­கம் தொற்­ற­வி­டா­மல் தடுக்க அடுத்த மாதத்­திற்­குள் முதல் தவணை தடுப்­பூ­சியை அனை­வ­ருக்­கும் போட்டுவிட வேண்­டும் என்ற இலக்­கு­டன் செயல்­பட்டு வரு­கி­றோம் என்று கூறியுள்ள மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை செய­லர் ராதா­கி­ருஷ்­ணன், தடுப்­பூ­சி­களை அதி­கமாக உடனே வழங்கவேண்­டும் என மத்­திய அர­சி­டம் வலி­யு­றுத்தி உள்­ளோம் என்றார்.