மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஏழு மாதங் களுக்குப் பிறகு மீண்டும் அதிகரித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கும் வந்து செல்லும் விமானச்சேவைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 விமானங்களில் 2,000 முதல் 3,000 பயணிகளே பயணம் வந்து திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் விமானச் சேவை களின் எண்ணிக்கையும் அதி கரித்தது. 180 விமானங்களில் ஏறத்தாழ 18,000 போ் வரை பயணம் செய்துள்ளனர்.
ஆனால், இந்த செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் இவ்விமான நிலையத்தில் இருந்து 31 நகரங்களுக்கு 200 விமானங்களில் மொத்தம் 23,217 போ் பயணம் செய்துள்ளனா்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள் ளிட்ட நகரங்களுக்குக் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொவிட்-19 தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாக விமானப்பயணங்கள் அதிகரித்து உள்ளன.
டிசம்பர் மாத இறுதிக்குள் இச்சேவை 300க்கும் மேல் அதிக மாகும் என்று தெரிகிறது.