ரூ.3 ேகாடி நகைக்கடன் ேமாசடி; வங்கியாளர்கள் நால்வர் பணிநீக்கம்

ரூ.3 ேகாடி நகைக்கடன் ேமாசடி; வங்கியாளர்கள் நால்வர் பணிநீக்கம்

2 mins read
af87769b-da3f-46e6-8d43-fc7afff406b7
-

திருச்­செந்­தூர்: வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது நகையை அடகு வைக்கா மலேயே, நகைக்­க­டன் என்ற பெய ரில் கூட்­டு­றவு வங்­கி ஒன்றில் மாபெ­ரும் மோசடி நடந்­துள்­ளது.

தூத்­துக்­குடி மாவட்­டம், திருச் செந்­தூரை அடுத்­துள்ள குரும்­பூரில் தொடக்க வேளாண்மை கூட்­டு­றவு வங்கி உள்­ளது.

இந்த வங்­கி­யில் இரண்­டா­வது நாளாக நேற்று நடத்­தப்­பட்ட விசார ணையில், ரூ.3 கோடிக்­கும் மேல் மோசடி செய்­யப்­பட்­டி­ருப்­பது முதல் முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதனையடுத்து, இந்த வங்கி யின் தலைவர் முருகேசபாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

வங்கியின் செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமி­ழகக் கூட்­டு­றவு வங்­கி­களில் ஐந்து பவுன் வரை­யி­லான நகை களை அட­மா­னம் வைத்­தி­ருந்­தால் அந்­தக் கடன்­தொகை தள்­ளு­படி செய்­யப்­படும் என்று தமி­ழக அரசு அண்­மை­யில் அறி­வித்­தது.

இதை­ய­டுத்து, அனைத்து கூட்­டு­றவு வங்­கி­க­ளி­லும் பயனாளிகளின் பெயர்ப் பட்­டி­ய­லைத் தயா­ரிக்­கும் பணி­யில் வங்கி உயர்­அ­தி­கா­ரி­கள் ஈடு­பட்டு வந்த நிலையில், குரும்­பூர் வங்கி­யிலும் ஆய்வு நடந்தது.

அப்­போது, வங்­கி­யில் நகையே இல்லா­மல் போலி­யான பையை வைத்து, அதில் நகை இருப்­ப­து­போல கூறி, கடன் வாங்­கப்பட்டு இருப்­பதை அறிந்த ­அதிகா­ரி­கள் ேபர­திர்ச்­சி அடைந்தனர்.

அத்­து­டன், வங்­கி­யில் 548 பைகளில் வைக்­கப்­பட்­டி­ருந்த நகை களில் 261 பைகளில் இருந்த நகை­கள் மாய­மா­ன­தும் கண்டுபிடிக்­கப்­பட்­டது.

அதிகாரிகளின் விசாரணையில் நகையே இல்­லா­மல் நகைக்­க­டன் என்ற பெய­ரில் ரூ.3 கோடியே 3 லட்­சத்து 92 ஆயி­ரத்து 700 மோசடி செய்­தி­ருப்­பது அம்­ப­ல­மா­னது.

இதே­போல், வாடிக்கையாளர்க ளின் வைப்­புத் தொகையை அவர் களது கணக்­கில் வரவு வைக்காமல் அவர்­க­ளுக்கு போலி­யான 'பாண்ட்' பத்­தி­ரம் கொடுத்து லட்­சக்­க­ணக்­கில் மோச­டி­யில் ஈடு­பட்­டதும் தெரி­ய­வந்­தது.

தொடர்ச்­சி­யாக வங்­கி­யில் லட்­சக்­க­ணக்­கில் பணத்தை வைப்­புத்­தொ­கை­யாக செலுத்­தி வந்த வாடிக்­கை­யா­ளர்­கள் இதுகுறித்து விசா­ரணைக் குழு­வி­ன­ரி­டம் புகார் அளித்து வரு­கின்­ற­னர்.

நகைக்­க­டன், விவ­சாயக் கடன், தனி­ந­பர்­ க­டன் என 500க்கும் மேற்­பட்­டோ­ருக்கு கட­னு­தவி வழங்­கப்­பட்டு, பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­தி­ருப்­பது தெரி­ய­வந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.