காரில் இருந்த வெடி வெடித்ததில் 30 வீடுகள் சேதம்

2 mins read
3899db52-514d-4637-8261-f296f3fd9ab5
-

சாத்­தான்­கு­ளம்: சாத்­தான்­கு­ளம் அருகே நேற்று அதி­காலை நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த வெடிபொருள்கள் வெடித்­ததைத் தொடர்ந்து, காரும் வெடித்­துச் சித­றி­யது. இத­னால், கார் நிறுத்­தப்­பட்­டி­ருந்த சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­யில் இருந்த முப்பதுக்கும் மேற்­பட்ட வீடு­களும் பலத்த சேதம் அடைந்­தன. ஆனால், உயி­ரி­ழப்பு ஏதும் ஏற்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும், காரில் அனு­மதி யின்றி வெடி பொருள்­க­ளைக் கொண்டு வந்­திருந்த பாலகிருஷ்­ணன் என்பவரை சாத்­தான்­கு­ளம் போலி­சார் கைது செய்­த­னர்.

சாத்­தான்­கு­ளம் அருகே உள்ள இடைச்­சி­விளை ஆனந்­த­விளை யைச் சேர்ந்­த­வர் பால­கி­ருஷ்­ணன், 45. இவர் நெல்லை மாவட்­டம் திசை­யன்­விளை அருகே உள்ள அணைக்­ க­ரை­யில் வெடிக் கிடங்கு வைத்துள்ளார். இந்தக் கிடங்கில் திரு­ம­ணம், திரு­வி­ழாக்­க­ளுக்குத் தேவையான வெடிபொருள்களைத் தயா­ரித்துக் கொடுத்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், நவம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள தீபா­வளி பண்­டி­கைக்காக வெடி கடையைத் திறப்பதற்­காக கடை உரி­மை­யா­ளர் ஒரு­வர் வெடியைக் கொண்டு வந்து தரும்­படி கேட்டுள்­ளார்.

அதைக்கொண்டு சென்று கொடுப்­ப­தற்­காக தனது காரில் ரூ.30,000 மதிப்­பிலான வெடிகளுடன் அவர் வீட்­டுக்கு வந்­துள்­ளார்.

அப்­போது, வீட்­டின் வாசல் அருகே வந்­த­வர், காரின் கதவை 'ரிமோட்' மூலம் மூடி உள்­ளார். அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் வெடித்துச் சுக்கு நூறா­கி­யது. இதில் பால­கி­ருஷ்ணனுக்கு கையில் லேசான காயம் ஏற்­பட்­டது.

மேலும், அரு­கா­மை­யில் உள்ள 30க்கும் மேற்­பட்ட வீடு­களில் விரி­சல் உண்­டாகி சேத­ம­டைந்­தன.

காரில் இருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் கார் சேதம் அடைந்ததுடன் சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தன. படம்: ஊடகம்