யாகத்தில் போடப்பட்ட காசால் உயிரிழந்த பெண்

1 mins read
e53a02d6-4537-4b46-aa84-c1832141866d
-

மதுரை: யாகத்­தில் போடப்­பட்ட காசு­கள் ஒரு பெண்­ணின் உயி­ருக்கே உலை வைத்­துள்­ளது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மதுரை மாவட்­டம், மேலூரை அடுத்த சாலைக்­கி­பட்­டி­யில் உள்ள விநா­ய­கர் கோவி­லில் கடந்த 14ஆம் தேதி கும்­பா­பி­ஷே­கம் நடந்­தது.

பொது­வாக, கும்­பா­பி­ஷே­கத்­தின் போது யாக­சாலை பூஜைக்குப் பயன்­படுத்­தப்­பட்ட காசு­களை எடுத்­துச்­சென்று வீட்­டில் வைத்­தால் செல்­வம் பெரு­கும் என்­பது ஐதீ­கம்.

இதை­ய­டுத்து, மேலூர் அருகே உள்ள மேல­வ­ளவு ஊராட்சி மன்­றத் துணைத் தலைவி சங்­கீதா, யாகம் செய்து சூடாக இருந்த 11 காசு­களை கைப்­பை­யில் போட்­டுக்­கொண்டு தனது இரு­சக்­கர வாக­னத்­தில் நான்­கு­வ­ழிச் சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது திடீ­ரென்று அவர் மீது தீப்­பற்­றி­யுள்­ளது. இரு­சக்­கர வாக­னத்­தில் அவர் தனி­யாக வந்­த­தால் தீயை அணைக்­க­மு­டி­யா­மல் போரா­டி­யுள்­ளார். சிறிது நேரத்­திற்­குப் பிறகு அங்கு வந்­த­வர்­கள் தீயை அணைத்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, 60% தீக்­கா­யங்­க­ளு­டன் மது­ரை­ மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட சங்­கீதா நேற்று காலை உயி­ரி­ழந்­தார்.

எரிந்­து­கொண்­டி­ருந்த யாகத்தில் இருந்து சூட்டுடன் காசை எடுத்து கவ­னக்­கு­றை­வாக கைப்­பை­யில் போட்­டதே தீவி­பத்­திற்கு கார­ணம் என காவல்­து­றை­யின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.