முதல்வர்: திருவாரூரில் சூரியசக்தி மின் பூங்கா; போட்டி போட்டு பணிபுரியும் அமைச்சர்கள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இைணப்பு

முதல்வர்: திருவாரூரில் சூரியசக்தி மின் பூங்கா; போட்டி போட்டு பணிபுரியும் அமைச்சர்கள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இைணப்பு

2 mins read
14c25515-873c-4716-8ae7-126cb0002813
சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புக்கான சான்றுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். படம்: மாலை மலர் -

சென்னை: தமி­ழக விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் வகை­யில், ஒரு லட்­சம் தமி­ழக விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு வழங்­கும் திட்­டத்தை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று தொடங்­கி­வைத்­தார்.

மாநி­லத்­தில் இந்த இணைப்­புத் திட்­டத்­தைப் பெறு­வ­தற்­காக 452,777 விவ­சா­யி­கள் பதிவு செய்­திருந்த னர்.

இவர்களில், முதல்­கட்­ட­மாக ஒரு லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு மின் இணைப்பு வழங்­கும் திட்­டத்தைத் தொடங்கிவைத்து முதல்­வர் பேசியபோது, "விவ­சா­யி­க­ளுக்கு வழங்கப்பட உள்ள புதிய மின் இணைப்­புத் திட்­டம் மகத்தானது.

"இதன்மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்தியைப் பெருக்கி, வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் சூழல் உள்ளது.

"புதிய மின் இணைப்­பு­ கிடைக்கப் ெபற்றுள்ள விவ­சா­யி­கள் மின்­சா­ரத்தை தேவைக்­கேற்ப சிக்­க­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

"சூரிய சக்தி மூலம் மின் சாரத்தை தயாரிக்கவும் முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திரு­வா­ரூ­ரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா விரை­வில் அமைக்­கப்­பட உள்­ளது.

"தமி­ழக மின்­வா­ரி­யத்­தைக் கடந்த 10 ஆண்­டு­க­ளாக அதி­முக ஆட்சியாளர்­கள் முறை­யா­கப் பரா­ம­ரிக்­கா­மல் சீர­ழித்­து­விட்­ட­னர்," என்று குற்­றம்சாட்­டி­யுள்ள முதல்­வர், "அதி­முக ஆட்­சி­யில் இரண்டு லட்­சம் விவ­சா­யி­க­ளுக்­குத்­தான் மின் இணைப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், திமுக ஆட்­சிக்கு வந்த நான்கு மாதங்­களிலேயே ஒரு லட்­சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்தியுள்­ளோம்.

"தற்­போது தமி­ழ­கத்­தில் நடந்து­வரும் திமுக ஆட்சி உழ­வர்­க­ளுக்­கா­னது," என்றார்.

"கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்­க­வில்லை. பொறுப்­பேற்­றேன் என்று சொல்­ல­லாம். அந்த அளவுக்கு அரசின் திட்டங் களை நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்­கள் பணி­க­ளைச் ெசவ்வனே செய்து வருகின்றனர். இதை­விட வேக­மான ஆட்சி தமி­ழ­கம் தவிர வேறு எந்த மாநி­லத்­தி­லும் நடை­பெ­ற­வில்லை," என்று முதல்வர் கூறியுள்ளதாக 'இந்து தமிழ் திசை' ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.