காவலர்களுக்கு வாரம் ஒருநாள் ஓய்வு கட்டாயம்

காவலர்களுக்கு வாரம் ஒருநாள் ஓய்வு கட்டாயம்

1 mins read
27edfc12-68f1-42d4-8f91-bea8475c28a9
-

சென்னை: தமி­ழ­கக் காவ­லர்­களுக்கு வாரத்­தில் ஒருநாள் வாராந்­திர ஓய்வு கட்­டா­ய­மாக அளிக்­கப்­பட வேண்­டும் என டிஜிபி சைலேந்­தி­ர­பாபு சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளார்.

ஓய்வு தேவைப்­ப­ட­வில்லை என தெரி­விக்­கும் காவ­லர்­களுக்­கும் ஓய்வு தினத்­தன்று பணி­யில் இருக்­கும் காவ­லர்­களுக்­கும் மிகை­நேர ஊதி­யம் வழங்­கப்­ப­டல் வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன் காவல்­து­றை­யின் சார்­பாக பிறந்­த­நாள், திரு­மண நாள் வாழ்த்­துச் செய்தி மாவட்ட மாந­கர காவல் கட்­டுப்­பாட்டு அறை­யின் வானொலி மூல­மாக சம்­பந்­தப்­பட்ட காவ­லர்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.