'என் தாத்தாவின் தாய்மை உணர்வே அவரை நாட்டின் தந்தையாக மாற்றியது'

'என் தாத்தாவின் தாய்மை உணர்வே அவரை நாட்டின் தந்தையாக மாற்றியது'

2 mins read
d05187a7-2ff9-4add-8105-576c4b5f5d1c
மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று மலா் தூவி மரியாதை செலுத்திய கல்லூரி மாணவிகள். படம்: தினமணி -
multi-img1 of 2

மதுரை: தனது தாத்­தா­வுக்­குள் இருந்த தாய்மை உணர்வே அவரை தேசத் தந்­தை­யாக மாற்­றி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார் மகாத்மா காந்­தி­யின் பேத்தி தாரா காந்தி பட்­டாச்­சார்யா.

"காந்­தி­யைப் போலவே இன்­றைய இளை­ஞர்­களும் வாசிப்பு, எழுத்­துப் பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்க முயற்சி செய்­ய­வேண்­டும்," எனவும் அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

இந்­தி­யா­வின் தந்தை மகாத்மா காந்­தி­ய­டி­கள், 1921ஆம் ஆண்டு செப்­டம்­பர் 22ஆம் தேதி ஒரு பொதுக்­கூட்­டத்­தில் கலந்து கொள் வதற்­காக மதுரை வந்­தி­ருந்­தார்.

அப்­போது, அங்­கி­ருந்த விவ­சா­யி­க­ளின் வறிய கோலத்­தைக் கண்­ட­வர், அன்­று­மு­தல் தானும் மேல்­சட்­டை­யைத் துறந்து அரை ஆடைக்கு மாறி­னார்.

அந்த வர­லாற்று சிறப்­பு­மிக்க நிகழ்­வின் நூற்­றாண்டு விழா நேற்று முன்­தி­னம் மது­ரை­யில் உள்ள காந்தி அருங்­காட்­சி­ய­கத்­தில் கொண்­டா­டப்­பட்­டது. நேற்­றும் இக் கொண்­டாட்­டம் தொடர்ந்­தது.

இந்­நி­கழ்­வில் கலந்­து­கொள்ள காந்­தி­யின் பேத்தி தாரா காந்தி, கொள்­ளுப் பேரன் வித்­தூர் பர­தன் ஆகி­யோர் டெல்­லி­யில் இருந்து மது­ரைக்கு வந்­தி­ருந்­த­னர்.

தாரா காந்தி பேசியபோது, "விவ­சா­யி­கள், ஏழை­க­ளின் துய­ரத்தை வெளிப்­ப­டுத்த காந்தி அரை ஆடைக்கு மாறி­னார். மதுரை என் தாய் நிலம் என்­ப­தால் இங்கு நான் ஆசீர்­வ­திக்­கப்­பட்ட பெண்­ணாக உணர்­கி­றேன்," என்­றார்.

"1947ல் விடு­தலை பெற்ற இந்­தி­யா­வில் இன்­றைக்­கும் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­கள் உள்­ளன. அச்­ச­மின்றி வெளி­யில் சென்று வரு­வது இய­லாத காரி­ய­மாக உள்­ளது.

"இன்­னும் பல்­வேறு நீதிக்­காகவும் நாம் தொடர்ந்து போரா­டிக் கொண்­டு­தான் உள்­ளோம்.

"எந்த அர­சி­யல் கட்சி மீதும் எனக்கு நம்­பிக்கை இல்லை. மக்­க­ளாட்­சியை மட்­டுமே நம்­பு­கி­றேன்,'' எனக் கூறி­யுள்­ளார்.

என் தாத்தா காந்தியைப் போலவே இன்றைய இளையர்களும் பலவீனமான மனிதர்களிடம் கனிவுடன் பழகவேண்டும்.

பிற மொழி, பிற மனி­தர்­க­ளை நேசிப்பது போலவே பிற மதங்­க­ளை­யும் நேசிக்க வேண்­டும்.

காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா