11 இடங்களில் 8 கிலோ தங்கம், ஆவணங்கள் சிக்கின

11 இடங்களில் 8 கிலோ தங்கம், ஆவணங்கள் சிக்கின

2 mins read
c3d9c57f-37ca-4ad2-be1f-75a4d048e25c
வெங்­க­டா­ச­லம். படம்: ஊடகம் -

சேலம்: தமிழ்­நாடு மாசு கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தின் தலை­வ­ராக இருப்­ப­வர் வெங்­க­டா­ச­லம். வரு­மா­னத்­துக்கு அதி­க­மா­கச் சொத்து சேர்த்­த­தா­க­வும் லஞ்­சம் வாங்­கி­ய­தா­க­வும் இவர் மீது குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இதைத்­தொ­டர்ந்து, சேலம் மாவட்­டம், ஆத்­தூர் அருகே அம்­மம்­பாளை­யத்­தில் உள்ள வெங்­க­டா­ச­லத்­தின் வீடு, சென்னை கிண்­டி­யில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கம், வேளச்­சே­ரி­யில் உள்ள வீடு உட்­பட 11 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் நேற்­று­முன்­தி­னம் சோதனை நடத்­தி­னர்.

இந்­தச் சோத­னை­யின் முடி­வில் எட்டு கிலோ தங்­கம், ரூ.13 லட்­சத்து 50,000 ரொக்­கப்­ப­ணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவற்­றைத் தவிர சந்­தன மரத்­தா­லான 10 கிலோ பொருட்­களும் முக்­கிய ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்பட்­டன. இந்த ஆவ­ணங்­கள், குற்­றச்­சாட்டுகளின் அடிப்­ப­டை­யில் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அதி­முக ஆட்சி நடந்த சம­யத்­தில் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச­லம் லஞ்­ச­மாக பெற்ற புகா­ரின் அடிப்­ப­டை­யில் இந்­தச் சோதனை நடந்­துள்­ளது.

தேர்­தல் முடிவு வெளி­யா­வ­தற்கு முன் அவ­சர அவ­ச­ர­மாக 52 நிறு வனங்­க­ளுக்கு அவர் ஒப்­பு­தல் வழங்­கி­ய­தா­கக் குற்­றம்­சாட்­டப்படு­கிறது.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் அவ­ச­ரக் கூட்­டம் நடத்தி வெங்­க­டா­ச­லம் ஒப்­பு­தல் வழங்­கி­ய­தன் பின்­ன­ணி­யில் பெரும் லஞ்­சம் கைமா­றி­ய­தா­க­வும் புகார் கூறப்­ப­டு­கிறது.

இது­தொ­டர்­பாக லஞ்ச ஒழிப்­புத் துறை வெளி­யிட்ட செய்­திக் குறிப்­பில், "சோத­னை­யில் ரூ.13.5 லட்­சம் பணம், 8 கிலோ தங்­கம், முக்­கிய ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. விசா­ரணை செய்து வரு­கி­றோம்," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெங்­க­டா­ச­லத்­தின் வீட்­டில் சுமார் 10 கிலோ சந்­தன மரத்­தா­லான பொருட்­கள், சந்­த­னத் துண்­டு­கள் இருந்ததை அடுத்து, தமிழ்­நாடு வனத்­துறை அதி­கா­ரி­கள் மூலம் நட­வ­டிக்கை எடுக்­கக் கோரப்­பட்­டுள்­ளது எனவும் லஞ்ச ஒழிப்­புத் துறை கூறியுள்­ளது.