சென்னை: தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பு டைய ரவுடிகளின் வீடுகளில் போலிசார் நடத்திய திடீர் சோத னையில் ஒரேநாள் இரவில் 560 பேர் கைதாகினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்த சோதனையின்போது, கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், மூன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங் கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும் 700 இடங்களில் நடைபெற்ற சோதனை யில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ரவுடிகளின் அத்து மீறலை ஒடுக்கவும் டிஜிபி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடைபெற்றது.
துணை ஆணையர் ராஜேஷ் கண்ணாவின் தலைமையில் நடந்த சோதனையில் ரவுடிகளின் வீட்டில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
"இனியும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக் கூடாது," என போலிசார் சில ரவுடிகளை எச்சரித்துவிட்டுச் சென்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதி யில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டிலும் காவல்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக திண்டுக்கல்லில் 44 ரவுடிகளும் பெரம்பலூரில் ஆறு ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளைக் காவல்நிலையங் களுக்கு அழைத்துச்சென்று போலி சார் விசாரணை செய்தனர்.
கன்னியாகுமரியில் நடத்திய சோதனையின்போது, நன்னடத்தை விதிகளை மீறியதாக 39 ரவுடி களைப் போலிசார் கைது செய்த தாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் 10 நாட்களில் மட்டும் 15 கொலைகள் நடந்துள்ளதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்தவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், அதிக அளவில் ரவுடி கள் கைதாகி உள்ளனர்.