சென்னை: ஆலய வழிபாடுகளின் போது இறைவனுக்கு நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.
இதுபோல் பயன்பாட்டில் இல்லா மல் இருக்கும் நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி, அவற்றை தங்கக் கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் வைப்பு நிதியாக இருப்பு வைக்க முடிவு செய்துள்ள தாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இதன்மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் சொன்னார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறுகையில், "கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி, வங்கிகள், வைப்பு நிதிகள் அடிப்படையில் சேமிக்கவும் அதன் மூலம் வருமானம் ஈட்டி அதை கோவில் பணிகளுக்குச் செலவிட வும் திட்டமிட்டுள்ளோம். கோயிலில் மொட்டை அடிப்பதற்குக் கட்டணம் இல்லை. இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது," என்றார்.

