தனிநபர்கள் யானையை வளர்க்க நீதிமன்றம் தடை

தனிநபர்கள் யானையை வளர்க்க நீதிமன்றம் தடை

2 mins read
737da092-f40b-44c4-bc4d-38cd0361fb21
யானைகளுக்கு பயிற்சி தரும் பாகன்கள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் தனி நபர்­களின் கட்­டுப்­பாட்­டில் யானைகளை வளர்ப்­ப­தற்கு சென்னை உயர் நீதி­மன்­றம் தடை விதித்துள்­ளது.

கோவில் யானை­க­ளுக்கு பாகன் களை நிய­மிக்­க­வும் அவற்றை முறை யாகப் பரா­ம­ரிக்­க­வும் கோரிய வழக்­கின் விசா­ரணை, தலைமை நீதி­பதி சஞ்­ஜீவ் பானர்ஜி, நீதி­பதி ஆதிகே­ச­ வலு அமர்­வின் முன்பு தொடர்ந்து நடந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த வழக்கு ேநற்று முன்தினம் மீண்­டும் விசா ரணைக்கு வந்­த­போது, தமி­ழ­கக் கோவில்­களில் 32 யானை­களும் தனி நபர்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் 31 யானை­களும் வனத்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் 67 யானை­களும் இருப்­ப­தாக மாநில அரசு கூறியது.

இந்த விவ­ரங்­க­ளைக் காணொளி யாகப் பதிவு செய்­யும் பணி­கள் நடந்து வரு­வ­தாகவும் அவற்றை அறிக்­கை­யாக தாக்­கல் செய்ய கூடு­தல் அவ­கா­சம் வழங்கவேண்­டும் என­வும் அரசு கோரியது.

இக்­கோ­ரிக்­கையை ஏற்­றுக் கொண்ட நீதி­ப­தி­கள் வழக்கு விசா­ரணையை அக்­டோபா் 21ஆம் தேதிக்கு ஒத்­தி­வைத்­தனா்.

அத்­து­டன், சிகிச்­சை வழங்கு வதற்கான நோக்­கத்­தைத் தவிர, வேறு எதற்காகவும் எந்­த­வொரு யானையை­யும் சிறை­பி­டிக்­கக் கூடாது. தனி­நபர்­கள் யானை­களைப் பிடித்து தங்­க­ளது கட்­டுப் பாட்­டுக்­குள் வைத்­துக்­கொள்ளாமல் இருப்­பதை அரசு அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்­டும் எனவும் நீதி­பதிகள் அறிவுறுத்தி உள்ளதாக தினகரன் நாளிதழ் தகவல் குறிப்பிட்டுள்ளது.

சென்­னை­யைச் சேர்ந்த விலங்­கு­கள் நல ஆர்­வ­லர் முரளிதரன் என்­ப­வர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் அளித்த மனு­வில், கோவில் யானை­களைப் பெரிய இடங்­களில், இயற்­கை­யான சூழ­லில் பரா­ம­ரிக்க வேண்­டும் என்று கோரி­யி­ருந்­தார்.

"கோவில் யானை­களை நடைப்­பயிற்­சிக்குக் கூட்­டிச் செல்வதில்லை. முறை­யான உணவு வழங்குவதில்லை. யானைகளுக்கு உண­வு வழங்­கு­வ­திலும் ஊழல் நடப்­ப­தால்தான் இயற்கை உணவை மட்­டுமே வழங்கு­கின்­ற­னர். புர­தச்சத்து உள்ள உண­வு­களை வழங்­கு­வ­தில்லை," என்­றும் குற்­றம்சாட்­டி­யி­ருந்­தார்.

ஆண் யானைக்கு துணை­யாக பெண் யானை­யை­யும் பரா­ம­ரிக்க அனுமதிக்க வேண்­டும் என்­றும் மனு­வில் கூறியி­ருந்­தார்.