வெங்காய விவசாயிகள் போராட்டம் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்யவும் வலியுறுத்து

1 mins read
5e1c3967-75aa-4a7c-9a29-5eb893ef1857
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தை தரையில் கொட்டி நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணியினர். படம்: ஊடகம் -

திருப்­பூர்: வெங்­காய விலை சரிவு கார­ண­மாக தங்­க­ளது வாழ்­வா­தா­ரம் பெரி­தும் பாதிக்­கப்­பட்டு உள்ள தாக­வும் இந்­தப் பிரச்­சி­னைக்கு தமி­ழக அரசு விரைந்து ஓர் உட­னடி தீர்வு காண­வேண்­டும் என்­றும் வெங்­காய விவ­சா­யி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

தமி­ழக அரசு வெங்­கா­யத்­துக்கு சரி­யான விலை கிடைக்க ஆவன செய்­ய­வேண்­டும் என்றும் மத்­திய அரசு வெங்­காய ஏற்­று­ம­திக்கு அனு­மதி வழங்­க­வேண்­டும் என்­றும் அவர்­கள் கோரியுள்ளனர்.

திருப்­பூர் மாவட்ட ஆட்­சி­யர் அலுவல­கம் முன்­பாக தாங்கள் விளைவித்த வெங்­கா­யத்தை அவர்­கள் தரை­யில் கொட்டி நேற்று நூதன ஆர்ப்­பாட்­டம் நடத்தி­னர்.

இதில் பங்­கேற்ற விவ­சா­யி­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­போது, "கோவை, திருப்­பூர், ஈரோடு, கரூர், திண்­டுக்­கல், தேனி உள்­ளிட்ட மாவட்­டங்­களில் ஏறத்தாழ ஒரு லட்­சம் ஏக்­கர் நிலங்­களில் வெங்­கா­யம் சாகு­படி செய்­யப்­படுகிறது.

ஆனால், தங்­க­ளது வெங்­கா­ய மகசூலுக்கு ஏற்ற விலை கிடைக்கா மல் விவ­சா­யி­களின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது.

தற்­போது ஒரு கிலோ வெங்­கா­யம் ரூ.8க்கு விற்­கப்­ப­டு­வ­தால் விவ­சா­யி­கள் பெரும் நஷ்­டத்­திற்கு ஆளாகி வரு­கின்­ற­னர்.

தற்­போ­தைய விலை­யில் ஒரு ஏக்­கர் சாகு­படி செய்­தால் விவ­சாயி களுக்கு ரூ.40,000 நஷ்­டம் ஏற்­படு­கிறது. இத­னால் விவ­சாயிகளின் வாழ்­வா­தா­ரம் பாதிப்புக்கு ஆளாகி உள்­ளது.

எனவே வெங்­கா­யத்­திற்கு ஆத­ரவு விலையை நிர்­ண­யம் செய்ய வேண்­டும், வெங்­கா­யத்தை அரசே கொள்­மு­தல் செய்யவேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி போராட்டம் நடத்தினர்.