மாநிலம் தழுவிய அளவில் மூன்றாவது தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்

மாநிலம் தழுவிய அளவில் மூன்றாவது தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்

1 mins read
8600d7b6-e8e9-404a-87ab-3a8360154313
தடுப்பூசி போடும் ஒரு முகாமில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா தடுப்­பூசி போடும் முகாம்­களில் நேற்று ஏரா­ள­மா­னோர் திரண்­ட­னர்.

சென்னை சென்ட்­ரல் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த முகா­முக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேரில் சென்று ஆய்வு மேற்­கொண்­டார்.

நேற்று மாநி­லம் தழு­விய அள­வில் மூன்­றா­வது முறை­யாக கொரோனா தடுப்­பூசி முகாம் நடத்­தப்­பட்­டது. மொத்­தம் 20 ஆயி­ரம் இடங்­களில் முகாம்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஒரே நாளில் 1.5 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடும் இலக்கு­டன் இந்த சிறப்பு முகாம் ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருந்­தது.

சென்­னை­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த முகாம்­களில் ஏரா­ள­மான பொது­மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள திரண்­ட­னர்.