அழகிரி: கூட்டணி ஏதும் தேவை இல்லை

அழகிரி: கூட்டணி ஏதும் தேவை இல்லை

2 mins read
68936cc3-d31a-465e-9436-fb367d5ec9af
-

தேவகோட்டை காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்

சென்னை: தமி­ழ­கத்­தில் நடை­பெற உள்ள உள்­ளாட்­சித் தேர்­த­லில் அனைத்துக் கட்­சி­களும் தனித்­துப் போட்­டி­யிட வேண்­டும் என்று தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி வலி­யு­றுத்தி உள்­ளார்.

ஊரக உள்­ளாட்சி அமைப்­பு­கள் தான் உண்­மை­யான ஜன­நா­ய­கத்­தின் ஆணி­வேர் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

வானொலி நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்ற அவ­ரி­டம் பல்­வேறு கேள்வி­கள் எழுப்­பப்­பட்­டன. அவற்­றுக்­குப் பதி­ல­ளித்த அவர், மக்­கள் செல்­வாக்கு பெற்­ற­வர்­களே உள்­ளாட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற முடி­யும் என்­றார்.

"உள்­ளாட்­சித் தேர்­தல் மட்டு­மல்ல எந்த தேர்­த­லி­லும் தமிழக காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதி­கள் கிடைப்­பது இல்லை. உள்­ளாட்­சித் தேர்­த­லில் அனைத்துக் கட்­சி­க­ளுமே தனித்துப் போட்­டி­யிட வேண்­டும். கூட்­டணி அமைக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

"இம்­முறை அதிக எண்­ணிக்­கை­யி­லான இடங்­களில் வெற்­றி­பெ­றும் இலக்­கு­டன் காங்­கி­ர­சார் செயல்­பட வேண்­டும்," என அழ­கிரி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

அவரது பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்­கி­டையே, தேவ­கோட்­டை­யில் உள்­ளாட்­சித் தேர்­தல் தொடர்­பாக நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தின்­போது, காங்­கி­ர­சார் இடையே மோதல் வெடித்­தது. அப்­போது நாற்­கா­லி­களைத் தூக்கி வீசி ஒரு­வ­ரை ஒ­ரு­வர் தாக்­கிக்கொண்­ட­னர். இதில் சிலர் காய­ம­டைந்­த­னர்.

இந்த மோதல் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் நடைபெற்றது. தன் கண்முன்பே நிர்வாகிகள் இவ்வாறு நடந்து கொண்டதை அடுத்து, அவர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார்.

தேவகோட்டை கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மூன்றாவது வார்டில் காங்கிரஸ் கட்சி இம்முறை போட்டியிடுகிறது.

இது­தொ­டர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டத்­தின்­போதே அக்­கட்சி நிர்­வாகி­கள் இரு அணி­க­ளா­கப் பிரி்ந்து மோதிக்­கொண்­ட­னர்.

உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­காக ஒருங்­கி­ணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்று கட்சி மேலிடம் அறி­வு­றுத்­தி­யுள்ள நிலை­யில், இவ்வாறு மோதல் நடந்­துள்­ளது.