முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
bdfec27d-1c08-48e8-b118-7ab5e8ef8605
-

தேனி: முல்­லைப் பெரி­யாறு அணைக்கு வெடி­குண்டு மிரட்­டல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து அணைப் பகு­தி­யில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது.

நேற்று திரு­வ­னந்­த­பு­ரம் காவல்­துறை தலை­மை­ய­கத்­துக்கு வந்த மர்ம தொலை­பேசி அழைப்­பில், எதிர்­மு­னை­யில் பேசிய ஆட­வர், குண்டு வைத்து அணையைத் தகர்க்­கப்போவ­தா­கக் கூறி­னார்.

மேல­திக தக­வல்­கள் எதை­யும் குறிப்­பி­டா­மல் அவர் இணைப்பை துண்­டித்­ததை அடுத்து, போலி­சார் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­னர். இதில் மிரட்­டல் விடுக்­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைபே­சிக்கான இணைப்பு திருச்­சூ­ரில் பெறப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

அணைப்­ப­கு­தி­யில் மேற்­கொண்ட சோதனை நட­வடிக்கை­யின் மூலம் அம்­மி­ரட்­டல் வெறும் புரளி என்­ப­தும் உறு­தி­யா­னது. மிரட்­டல் விடுத்­த­வ­ருக்கு வலை­வீ­சப்பட்­டுள்­ள­தா­கப் போலி­சார் தெரி­வித்­த­னர்.

எனி­னும் அணைப்­ப­கு­தி­யில் வழக்­கத்­தை­விட கூடு­தல் போலி­சார் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.