தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்தாயிரம் ஆண்டுகால பழமையான எச்சங்கள் அகழாய்வில் கண்டெடுப்பு

1 mins read
ff4aeee4-a5b1-42c3-ae57-f1ce9a05b687
வெம்பக்கேட்டையில் கிடைத்த பொருள்கள் படம்: ஊடகம் -

விரு­து­நகர்: வெம்­பக்­கோட்டை­யில் நடை­பெற்று வரும் அகழ்­வா­ராய்ச்­சி­யின் போது ஐந்­தா­யி­ரம் ஆண்­டு­கள் பழமை வாய்ந்த வர­லாற்று எச்­சங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் உள்ள வெம்­பக்­கோட்­டை­யிலும் கீழடி போன்று ஆராய்ச்சி நடை­பெ­றும் என தொல்­லி­யல் ஆய்­வா­ளர்­கள் அறி­வித்­துள்­ள­னர். அர­சுத் தரப்­பில் இதற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

சங்­க­கால மண்­பாண்ட ஓடு­கள், பெருங்­கற்­கால பண்­பாட்டு எச்­சங்­கள், செப்­பேடு ஆகி­யவை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தொல்­லி­யல் ஆய்­வா­ளர் போ.கந்த­சாமி கூறி­யுள்­ளார்.

கி.மு.4,000 முதல் கி.மு.3,000 வரை­யி­லான கால­கட்­டத்­தில் இப்­ப­கு­தி­யில் மக்­கள் வாழ்ந்­துள்­ள­னர் என்­பதை தொல்­லி­யல் சான்­று­கள் நிரூ­பிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், சங்க கால கறுப்பு-சிவப்பு மண்­பாண்ட ஓடு­களும் இரும்பு பொருள்களும் வெம்­பக்­கோட்­டை­யைச் சுற்றியுள்ள மேடான பகு­தி­க­ளின் மேற்­ப­ரப்­பில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.