கடலூர்: தமிழகத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களாக ஞாயிறுதோறும் ெகாவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
"மாநிலத்தில் மூன்றாவது முறையாக நடந்த தடுப்பூசி முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கையும் தாண்டி 24 லட்சத்து 85,814 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இம்முறையும் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
"தடுப்பூசி போடுவதை மக்கள் திருவிழாவைப்போல் கொண்டாடி வருகின்றனர். முதல் கட்ட முகாமில் 29 லட்சம் பேருக்கும் இரண்டாம் கட்ட முகாமில் 16 லட்சத்து 43,879 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.