சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 27,762 பதவியிடங்களுக்கு 80,819 வேட்பாளர்கள் ேபாட்டியிடுகின்றனர்.
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 79,433 பேரின் வேட்பு மனுக்களும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தலில் போட்டியிட 1,386 பேரின் மனுக்களும் இறுதியாக ஏற்கப்பட்டன.
இதையடுத்து, மொத்தம் 80,819 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தினமணி ஊடகம் கூறியுள்ளது.
14,571 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் 2,981 பதவியிடங்களுக்குப் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சி புரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் எஞ்சியுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ள இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் ெசய்ய உள்ளதாகக் கூறியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கடந்த வாரத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, ஊரக உள்ளாட் சித் தேர்தலில் போட்டியிடும் தமது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 'உள்ளாட்சி-உரிமைக்குரல்' என்ற முழக்க வாசகத்துடன் நேற்று தனது பிரசாரத்தை காஞ்சீபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரசாரத்தில் பேசியபோது, "கடந்த 10 ஆண்டுகளாக நடை பெற்ற அதிமுக ஆட்சியின்போது கிராமப்புறங்களில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன. அதற்குத் தேவையான புதிய பேருந்துகளை வாங்கவும் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது," என்று தெரிவித்தார்.