தஞ்சாவூர்: ஆலயங்களில் உடைக்கப்படும் தேங்காய்களின் நீரை வீணாக்காமல் அதை பக்தர் களுக்கே விநியோகம் செய்யும் புதிய நடைமுறை அறிமுகமாகி உள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் செலவில் தேங்காய் நீரை சுத்திகரித்து வழங்கும் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை மத்திய நீர் வள, உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நேற்று காலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப் படுத்தினார்.
தேங்காய் நீர் வீணாவதைத் தடுக்கும் விதமாக, இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம் இந்த நவீன இயந்திரத்தை அமைத் துள்ளது.
"இதன்மூலம் கோயிலில் நேர்த்திக் கடனாக பக்தர்கள் உடைக்கும் தேங்காய் நீர் இதுவரை பயனின்றி வீணாகிய நிலையில், இனிமேல் அவை சுத்திகரிக்கப்பட்டு பக்தர்களுக்கே விநியோகம் செய்யப்படும்.
"இந்தியாவிலேயே முதல்முறையாக கோயில்களில் அமைக்கப்பட்டு வரும் இந்த இயந்திரத்தால் ஆேராக்கியம் ெமருகேறும். இந்த நவீன இயந்திரத்தின் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய்," என தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

