850 மருத்துவ மாணவர்களை சேர்க்க அனுமதி

850 மருத்துவ மாணவர்களை சேர்க்க அனுமதி

1 mins read
358e63c5-45bd-4d2a-a041-ddf6ec94c2be
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஏழு புதிய மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் நடப்பு ஆண்­டில் 850 மாண­வர்­க­ளைச் சேர்ப்­ப­தற்கு மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ள­தாக மருத்­துவ, மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று தெரி­வித்­தார்.

சென்னை எழும்­பூ­ரில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் கூறு­கை­யில், "தமி­ழ­கத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் ஏழு கல்­லூ­ரி­களில் 850 மாண­வர்­க­ளைச் சேர்ப்­ப­தற்கு ஒப்­பு­தல் அளித்­துள்ள மத்­திய அரசு, தமி­ழக மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் 1,650 இடங்­க­ளுக்கு மாண­வர்­க­ளைச் சேர்க்க அனு­மதி அளித்­துள்­ளது.

"ஏற்­கெ­னவே தமி­ழ­கத்­தில் உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் சுமார் 800 கூடு­தல் எம்­பி­பி­எஸ் இடங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தற்­போது ஏழு புதிய மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் நடப்­பாண்டே மாண­வர் சேர்க்கை நடத்­து­வ­தற்­கான அனு­ம­தியை மத்­திய அரசு வழங்­கி­யுள்­ளது. 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளி­லும் மாண­வர் சேர்க்­கை­யைத் தொடங்க மத்­திய அரசை வலி­யு­றுத்தி உள்­ளோம்," என்றார்.