'வருமுன் காப்போம்' சுகாதார திட்டம் மீண்டும் துவக்கம்

'வருமுன் காப்போம்' சுகாதார திட்டம் மீண்டும் துவக்கம்

2 mins read
30d20210-94ca-4a3c-835c-26fdc174ee06
திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின். படம்: ஊடகம் -

முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 1,240 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்

சேலம்: தமி­ழ­கத்­தில் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு செயல்­படுத்­தப்­பட்ட 'வரு­முன் காப்­போம்' திட்­டம் மீண்­டும் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

சேலம் மாவட்­டம் வாழப்­பா­டி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று இத்­திட்­டத்தை தொடங்கி வைத்­தார்.

இந்­தத் திட்­டத்­தின் வழி மாநி­லம் முழு­வ­தும் ஆண்­டு­தோ­றும் 1,240 இடங்­களில் முகாம்­களை நடத்த சுகா­தா­ரத்­துறை திட்­ட­மிட்­டுள்­ளது.

'வரு­முன் காப்­போம்' திட்­ட­மானது கடந்த 2006ஆம் ஆண்டு, அன்­றைய முதல்­வர் கரு­ணா­நி­தி­யால் தொடங்­கப்­பட்­டது. அச்­ச­ம­யம் மாநி­லம் முழு­வ­தும் அத்­திட்­டம் பர­வ­லா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டது.

எனி­னும் பின்­னர் 2011ஆம் ஆண்டு அதி­முக ஆட்சி அமைந்த­தும் இத்­திட்­டம் முடங்­கி­யது. சுமார் பத்­தாண்டுக் கால ஆட்­சி­யில் இத்­திட்­டத்­துக்கு என நிதி ஏதும் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பாக திமுக பல­முறை கண்­ட­னம் தெரி­வித்த போதி­லும் 'வரு­முன் காப்­போம்' திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தில் அதி­முக அரசு ஆர்­வம் காட்­ட­வில்லை.

இதை­ய­டுத்து மீண்­டும் திமுக ஆட்­சிக்கு வந்­தால் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என அக்­கட்சித் தலைமை தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், அண்­மைய சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­ட­ரின்­போது மருத்­து­வத்­துறை சார்­பில் 110 அறி­விப்­பு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அவற்­றுள் முக்­கி­ய­மாக 'வருமுன் காப்­போம்' திட்­டம் மீண்டும் செயல்­ப­டுத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி நேற்று தொடங்கி வைக்­கப்­பட்ட திட்­டத்­தின் மூலம் மாநி­லம் முழு­வ­தும் மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த முகாம்­களில் பொது மருத்­து­வர், அறுவை சிகிச்சை மருத்­து­வர், குடல் நோய் மருத்­து­வர், குழந்தை மருத்­து­வர், சித்த மருத்­து­வர் உட்­பட 16 சிறப்பு மருத்து­வர்­கள் இருப்­பார்­கள் என்று சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

முகாம்­க­ளுக்கு வரும் பொது மக்­க­ளுக்கு உள்ள உடல் கோளாறு­க­ளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்­கப்­படும் என்­றும் நீரி­ழிவு, ரத்த அழுத்­தம் போன்ற நாள்­பட்ட வியா­தி­க­ளுக்கு உயர் மருத்­துவ­ம­னை­களில் சிகிச்­சைக்­குப் பரிந்­து­ரைக்­கப்­படும் என்றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்ள­னர்.

தமிழ்­நாடு முழு­வ­தும் ஆண்­டு­தோ­றும் 1,240 மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­பட உள்­ளன.