ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஐந்தாண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஐந்தாண்டுகள் சிறை

2 mins read
d5af16bc-40d6-4fdd-9b64-04760e1fc210
இந்திரகுமாரி. படம்: ஊடகம் -

சென்னை: முன்­னாள் அமைச்­சர் இந்­தி­ர­கு­மா­ரிக்கு ஊழல் வழக்­கில் ஐந்து ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதித்து சிறப்பு நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இந்த வழக்­கில் அவ­ரது கண­வர் உட்­பட மேலும் இரு­வ­ருக்­கும் தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.

கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தமி­ழக சமூக நலத்­துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்­தார் இந்­தி­ர­கு­மாரி. அப்­போது அதி­முக ஆட்­சி­யில் செல்­வாக்கு மிக்க அமைச்­ச­ராக­வும் இருந்­தார்.

இந்­நி­லை­யில், அவ­ரது கண­வர் பாபு நடத்தி வந்த மாற்­றுத் திற­னா­ளி­கள் அறக்­கட்­ட­ளைக்கு அரசு ஒதுக்­கிய தொகை­யில் முறை­கேடு நடந்­த­தா­கப் புகார் எழுந்­தது.

மாற்­றுத்­தி­ற­னாளி குழந்­தை­களுக்­காக அரசு ரூ.15.45 லட்­சம் ஒதுக்­கிய நிலை­யில், பாபு நடத்தி வந்த அறக்­கட்­டளை மூலம் எந்த­வித நலத்­திட்ட உத­வி­களும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­பட்­டதை இந்­தி­ர­கு­மாரி மறுத்­தார்.

இதையடுத்து அவர் மீது ஊழல் வழக்குப் பதிவானது. அவரது கணவர் உட்பட மேலும் சிலரும் இதில் சேர்க்கப்பட்டனர்.

முன்­னாள் அமைச்­சர்­கள், எம்­எல்­ஏக்­கள், எம்­பிக்­கள் மீதான வழக்­கு­களை விசா­ரிக்­கும் சென்னை சிறப்பு நீதி­மன்­றத்­தில் இந்த ஊழல் வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது.

நீண்­ட­கா­ல­மாக நீடித்த இந்த வழக்­கில் இப்­போது தீர்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அ­தன்­படி, இந்­தி­ர­கு­மா­ரிக்­கும் அவ­ரது கண­வர் பாபு­வுக்­கும் தலா ஐந்­தாண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மேலும், முன்­னாள் அரசு அதி­காரி சண்­மு­கத்­திற்கு மூன்று ஆண்­டு­கள் தண்­டனை விதிக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்­றம் அறி­வித்­தது.

இந்­தி­ர­கு­மாரி, தற்­போது திமு­க­வில் மாநில இலக்­கிய அணிச் செய­லா­ள­ரா­கப் பொறுப்­பில் உள்­ளார். தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.