மின்னூட்டிகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

மின்னூட்டிகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

1 mins read
abe6f8c4-fe6d-44b4-a525-91c03715df48
-

சென்னை: துபா­யில் இருந்து கைபேசி, மடிக்­க­ணினி 'மின்­னூட்­டி­கள்' (சார்­ஜர்) மூலம் தங்­கம் கடத்தி வந்த இரு­வர் சென்னை விமான நிலை­யத்­தில் சிக்­கி­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து ரூ.58 லட்­சம் மதிப்­புள்ள தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

துபா­யில் இருந்து வரும் சிறப்பு விமா­னத்­தில் பெரு­ம­ள­வில் தங்­கம் கடத்தி வரப்­ப­டு­வ­தாக கிடைத்த ரக­சி­யத் தக­வலை அடுத்து, சுங்க இலாகா அதி­கா­ரி­கள் விழிப்­பு­டன் இருந்­த­னர்.

நேற்று முன்­தி­னம் சென்னை வந்­த­டைந்த இரு பய­ணி­கள் மீது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது. அவர்­கள் இரு­வ­ரும் வெளியே செல்­வ­தில் முனைப்­பாக இருந்­த­தை­அ­டுத்து சந்­தே­கம் வலுத்­தது.

இரு­வ­ரை­யும் தடுத்து விசா­ரித்­த­போது, முன்­னுக்­குப் பின் முர­ணா­கப் பேசி­ய­தால், அவர்­க­ளது உடை­மை­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டன.

அப்­போது, இரு­வ­ரும் ஏரா­ள­மான கைபே­சி­கள், மடிக்­க­ணி­னி­க­ளைக் கொண்டு வந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது. அவற்­றுக்­கான மின்­னூட்­டி­களும் அதி­க­மாக இருந்­த­தால் சந்­தே­க­ம­டைந்து அவற்­றைச் சோதித்­த­னர்.

அப்­போது அவற்­றில் தங்­கம் மறைத்து வைக்­கப்­பட்டு இருந்­தது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து 1.38 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.