கே.எஸ்.அழகிரி: விட்டுக்கொடுத்து போவதே கூட்டணிக்கு அழகு

கே.எஸ்.அழகிரி: விட்டுக்கொடுத்து போவதே கூட்டணிக்கு அழகு

1 mins read
5ff96133-4ac2-4ce1-b864-aca044e39a73
-

சென்னை: சண்டை போடா­மல் ஒரு வருக்கு ஒரு­வர் விட்­டுக்கொடுத்­துப் போவ­து­தான் கூட்­ட­ணிக்கு அழகு என்று தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ். அழ­கிரி கூறி­யுள்­ளார்.

"ஊரக உள்­ளாட்­சித் தேர்த லுக்­கான இட ஒதுக்­கீட்­டில் கூடு­தல், குறைவு இருப்­பது வழக்க­மா­ன­து­தான். இது­கு­றித்து யோசிக்­கக்­கூ­டாது.

ஞபோட்­டி­யி­டும் எல்லா இடங்­க­ளி­லும் வெற்றி பெறு­வதே நமது இலக்­காக இருக்க வேண்­டும்,'' என்று அழ­கிரி சொன்­ன­தைக் கேட்ட தொண்­டர்­கள் அதி­ருப்தி அடைந்தனர்.

"விட்­டுக் கொடுத்து, விட்­டுக் கொடுத்தே வீணாய் போனோம். கூட்­டணிக் கட்­சி­கள் விட்­டுக் கொடுப்­பதே இல்லை. வருத்­த­மும் குறை­யும் நமக்கு மட்­டும்தான் இருக்­கிறது," என தொண்­டர்­கள் அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டும் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர்­களை அறி­மு­கம் செய்து வைத்து கே.எஸ்.அழ­கிரி பேசி­ய­போது, "நாம் விட்­டுக் கொடுப்­ப­தும் கூட்­ட­ணி­யில் இருப்­ப­வர்­கள் விட்டுக்கொடுப்­ப­தும் தான் கூட்­டணி. ஊரக உள்­ளாட்சித் தேர்­தல் என்­பது அனை­வ­ரின் எதிர்­கா­லம். கூட்­ட­ணி­யில் இடங்­களை பகிர்ந்து கொடுப்­ப­தில் நிறைய சிர­மம் உள்­ளது.

"எனவே, கூடு­தல், குறைவு என்­பது பற்றி யோசிக்­கக்­கூ­டாது. இடம் ஒதுக்­கீடு செய்­த­தில் கூட்­ட­ணி­யில் உள்ள அனைத்துக் கட்­சிகளுக்­கும் வருத்­த­மும் மகிழ்ச்­சி­யும் உள்­ளது. நாம் போட்­டி­யி­டும் இடத்­தில் வெற்றி பெற வேண்­டும். தோழமைக் கட்சி­க­ளின் வெற்­றிக்­கும் உழைக்க வேண்­டும்," என்றார்.