சென்னை: அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 4ஆம் தேதி காலை 10 முதல் 6ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அக்டோபர் 7ஆம் தேதி காலை 10 முதல் 9ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம், மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

