வானிலை மையம்: 4ஆம் தேதி வரை கனமழை பெய்யும்

1 mins read
b2e4c2f4-603d-40e4-8d53-5bc4ccf2286c
-

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

"இன்று முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்," என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி கீதா கூறியுள்ளார். சென்னையைப் பொறுத்த வரை நகரில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றார்.