சென்னை: தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பிரசாரம் செய்த திமுக, மொத்தம் 505 வாக்குறுதிகளை அளித்ததாகவும் அவற்றில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், மதுரைக்குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது முதல்வர் அவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சி என்று தெரிவித்த முதல்வர், தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் என்று உறுதி கூறினார்.
முதல்வர், மதுரை பகுதியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

