புதுக்கோட்டை: சொத்துப் பிரச்சினை காரணமாக தாயைக் கொன்ற மகனுக்குத் தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெற்ற தாயையே ஈவு, இரக்க மில்லாமல் கொலை செய்த குற்றத் துக்காக குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதி ஆர். சத்தியா வெள்ளியன்று மாலை தீர்ப்பை வாசித்தபோது கூறினார்.
இதனையடுத்து, குற்றவாளி ஆனந்த்தை திருச்சி மத்திய சிறையில் போலிசார் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மழை யூர் அருகே உள்ள மறவம்பட்டியைச் சேர்ந்த தங்கராசு-திலகராணி தம்பதியரின் மகன் ஆனந்த், 25.
இவர், கடந்த 2018ல் மறவன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வைத்து தனது தாய் திலகராணியை, 45, வெட்டிக்கொன்றார்.
இக்கொலை தொடா்பாக திலகராணியின் தாய் லட்சுமி, 68, மழையூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்ததை அடுத்து ஆனந்த் கைதானார்.
இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், ஆனந்த்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு தனது கணவா் தங்கராஜுவை திலகராணி கொன்றதாக மாவட்ட கூடுதல் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்கில் இருந்து திலகராணி விடுதலையானார்.
நடந்த சம்பவம் குறித்து போலிசாரிடம் ஆனந்த் அளித்துள்ள வாக்குமூலத்தில், "தந்தை தங்கராசுவை திலகராணி கொலை செய்தபோது எனக்கு 12 வயது. தந்தையின் குடும்ப சொத்தை எங்களுக்குக் கொடுக்க விரும்பாமல் திலகராணியே அனுபவிக்கத் திட்டமிட்டிருந்தார். இதனால் தாயின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அத்துடன், தந்தையையும் அவா்தான் கொன்றாா் என்ற எண்ணமும் என்னுள் இருந்ததால் எனது தாயை வெட்டிக் கொன்றேன்," என்று கூறியுள்ளார்.