தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

2 mins read
7b27808a-07b4-45e9-bf9b-2184692e987d
-

சென்னை: காவ­லில் மர­ண­மடைந்த ஆட்டோ ஓட்­டு­ந­ரின் குடும்­பத்­துக்கு ரூ.5 லட்­சம் பணத்தை இழப்­பீ­டாக வழங்­கும்­படி தமி­ழக அர­சுக்கு மாநில மனித உரிமை ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சென்னை மேட்­டுக்­குப்­பத்­தைச் சோ்ந்த சொக்கி என்­ப­வ­ரின் மகன் கதி­ர­வன். ஆட்டோ ஓட்­டு­ந­ரான இவா், கடந்த 2013ஆம் ஆண்டு வீட்­டில் உணவு சாப்­பிட்­டு­விட்டு ஓய்­வெ­டுத்­துக்கொண்டிருந்தாா்.

அப்­போது அவ­ருக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­துள்­ளது. இதை­ய­டுத்து, வீட்டை விட்டு வெளியே சென்ற அவரை மதுர வாயல் காவல் நிலைய காவ­லா்­கள் விசா­ரணை என்ற பெய­ரில் அழைத்­துச் சென்­றுள்­ள­னர்.

அதன்­பி­றகு, கதி­ர­வன் கீழ்ப்­பாக்­கம் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மக­னைக் காண சொக்கி மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் முன்பே கதி­ரவன் இறந்­து­விட்­ட­தாக தக­வல் சொல்­லி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, விசா­ர­ணைக்­காக காவல்நிலை­யம் அழைத்­துச் சென்று அடித்­துத் தாக்கி சித்­திரவதை செய்­த­தால்­தான் தனது மகன் மர­ணம் அடைந்­து­விட்­ட­தா­கக் கூறி, தமிழ்­நாடு மாநில மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் சொக்கி புகாா் அளித்தாா்.

இப்­பு­காரை விசா­ரித்த மனித உரி­மை­கள் ஆணைய உறுப்­பினா் துரை ஜெயச்­சந்­தி­ரன், கதி­ர­வ­னின் உட­லில் காயம் எப்­படி ஏற்­பட்­டது என்­பதை காவ­லா்­க­ளால் நிரூ­பிக்க முடி­ய­வில்லை என்­றும் குடி­போதை யில் இருந்­த­வரை காவல் நிலை­யம் அழைத்­துச் சென்று சித்­தி­ர­வதை செய்­த­தால்­தான் அவா் இறந்து இருக்­கிறாா் என்­ப­தால் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு ஐந்து லட்­சம் ரூபாய் இழப்­பீடு வழங்கவேண்­டும் எனவும் அர­சுக்கு உத்­த­ர­விட்டாா்.

அத்துடன், இவ்­வ­ழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜெயக்­குமாா் ஓய்வு பெற்றுவிட்­ட­தா­லும் ஏட்டு ரவீந்­தி­ரன் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தா­லும் மற்ற இருவா் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­க­வும் தமி­ழக அர­சுக்கு பரிந்­துரை செய்தாா்.