மூன்று மாதங்களில் தலைவர்கள் சிலைகளை அகற்ற உத்தரவு

மூன்று மாதங்களில் தலைவர்கள் சிலைகளை அகற்ற உத்தரவு

2 mins read
8ab66aab-859b-4305-8d73-1f542fedc847
-

சென்னை: தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள பொது இடங்­கள், நெடுஞ் சாலை­கள், அரசு நிலங்­கள், புறம் போக்கு நிலங்­கள், பொதுச் சாலை­கள் உள்­ளிட்ட இடங்­களில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் சிலை­களை மூன்று மாதங்­க­ளுக்­குள் அகற்ற வேண்­டும் என அர­சுக்கு உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மாநி­லத்­தில் 'தலை­வர் பூங்கா' என்ற பெய­ரில் பூங்கா ஒன்றை உரு­வாக்கி அங்கு இந்­தச் சிலை­கள் அனைத்­தை­யும் வைத்­துப் பரா­ ம­ரிக்க வேண்­டும் என­வும் நீதி­பதி ஆணை பிறப்­பித்­துள்­ளார்.

வேலூர் மாவட்­டம், கோனூர் கண்­டிகை கிரா­மத்­தில் உள்ள புறம்­போக்கு நிலத்­தில் அண்­மை­யில் அம்­பேத்­கர் சிலையை பஞ்­சா­யத்தினர் நிறு­வி­னர்.

இந்­நி­லை­யில், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்­றும்­படி தாசில்­தார் கூறினார்.

இதை எதிர்த்து, அதே கிரா­மத் தைச் சேர்ந்த வீர­ரா­க­வன் என்ற வழக்­க­றி­ஞர் சென்னை உயர் நீதி மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­தார்.

இந்த வழக்கு நீதி­பதி எஸ்.எம்.சுப்­ர­ம­ணி­யம் முன்பு நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, நெடுஞ்­சா­லை­களில் சிலை­களை வைக்­கக்­கூ­டாது என உச்ச நீதி­மன்­ற­மும் உயர் நீதி­மன்ற மும் உத்­த­ர­விட்­டுள்­ள­தால், சிலையை அகற்­றி­ய­தில் தவறில்லை என அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, சட்ட விதி­முறை களை­யும் உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்­பு­க­ளை­யும் பின்­பற்ற வேண்­டி­யது அவ­சி­யம் எனத் தெரி­வித்த நீதி­பதி, தமிழ்­நாட்டில் பொது இடங்­கள், நெடுஞ்­சா­லை­கள் உள்­ளிட்ட இடங்­களில் உள்ள சிலை­களை மூன்று மாதங்­களில் அகற்றவேண்­டும் என அர­சுக்கு உத்­தரவிட்­டார்.

சிலை­கள் பரா­ம­ரிப்­ப­தற்­கான செலவுகளைச் சிலையை வைத்தவர் ­க­ளி­டம் வசூ­லிக்க வேண்­டும் என­வும் சிலை­க­ளுக்­கான பரா­ம­ரிப்­புத் தொகை­யைச் செலுத்­தா­த­வர்­களி­டம் இருந்து அத்­தொ­கையை வசூ­லிக்க சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என­வும் உத்­த­ர­விட்டு, இந்த உத்­த­ர­வு­களை அமல்­படுத்­தி­யது தொடர்­பாக ஆறு மாதத்­தில் அறிக்கை தாக்­கல் செய்யும் படி அர­சுக்கு உத்­த­ர­விட்­டார்.

சமு­தா­யத்­துக்­கா­கத் தியா­கம் செய்த தலை­வர்­களை எந்த ஒரு தரு­ணத்­தி­லும் மதத்தின் ரீதி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தக் கூடாது. அதை அவர்­கள் கற்­பிக்­க­வில்லை எனத் தெரி­வித்­து வழக்கை நீதிபதி முடித்துவைத்­தார்.

தலைவர்களின் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதேசமயம் பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது.

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்