சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கை தமிழர்கள் கடந்த மாதத்திலிருந்து காணவில்லை.
இது பற்றி கேள்வியுற்ற 'கியூ' பிரிவு போலிசார் விசாரணை நடத்தினர். இதில் இலங்கை அகதிகள் 65 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு விசைப் படகில் ஏறி தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் அனைவரும் கனடா நாட்டுக்குச் செல்லும் நோக்கத்துடன் படகில் தப்பியதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் அவர்கள் மாட்டிக்கொண்டு தவிப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றிய முழு தகவல்களையும் கியூ பிரிவு போலிசார் சேகரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் அனைத்துலக போலிசார் உதவியும் நாடப்பட்டுள்ளது.

