சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 33 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல்திட்டத்தை வடிவமைத்து தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
டெங்கி காய்ச்சல், கொரோனா தொற்றாக இருந்தாலும் அவற்றைக் குணப்படுத்தும் வல்லமை தமிழக மருத்துவர்களிடம் உள்ளது என்றும் திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாமக்கல் மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்றும் கூறினார்.
தமிழகம் முழுவதும் 222 இடங்களில் உயிர்வாயு உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் புதிதாக 1,329 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 50 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.