விழுப்புரம்: வடிவேலு பட நகைச்சுவை காட்சியைப் போல "தென்னை மரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு குத்து" என வாக்குச்சீட்டில் உள்ள மாம்பழச் சின்னத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்க ளித்துள்ளார் ஒருவர்.
வேட்பாளர்கள் யாருடைய மனத்தையும் புண்படுத்தாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு வாக்களித்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண் ணப்பட்டு வருகின்றன. அப்போது, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் இருந்த நான்கு சின்னங்களுக்கும் ஒருவர் வாக்களித்துள்ளார்.
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

