திருச்சி: திருச்சி லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி(படம்) என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.
இப்பதவிக்கு கடல்மணி, கன்னியம்மாள், சத்தியநாதன் ஆகிய மூவரும் போட்டியிட்ட நிலையில், கடல்மணி 424 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை தன் வசமாக்கி உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்னியம்மாள் 423 வாக்குகளும் சத்தியநாதன் 137 வாக்குகளும் பெற்றனர்.