வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை

வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை

1 mins read
0b62465d-c26d-45b7-823b-9557f290006c
-

திருப்­பெ­ரும்­பு­தூர்: துப்­பாக்­கி­யைக் காட்டி மிரட்டி 54 வயது பெண்­ணி­டம் ஐந்து பவுன் தங்­கச் சங்­கி­லி­யைப் பறித்­துக்­கொண்டு ஓடிய வடமாநிலக் கொள்­ளை­யர்­கள் இரு­வ­ரில் ஒரு­வரை தமி­ழ­கப் போலிசார் 'எண்கவுன்டரில்' சுட்­டுக்­கொன்­ற­னர்.

மற்றொருவர் கைதானார். அவரிடம் இருந்து துப்­பாக்கி, கத்தி உள்­ளிட்ட ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், திருப் பெரும்­பு­தூர் அரு­கில் உள்ள தென்னலூர் பேருந்து நிலை­யத்­தில் நின்­று­கொண்­டி­ருந்த இந்­திரா என்ற பெண்­ணி­டம் கொள்­ளை­யர்­கள் துப்­பாக்­கி­யைக் காட்டி மிரட்டி தங்­கச்சங்­கி­லி­யைப் பறித்­துக்­கொண்டு ஓடி­யுள்­ள­னர்.

இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, தென்னலூர் ஏரிப் பகு­தி­யை ஒட்டியுள்ள காட்­டுப்­ப­கு­திக்­குள் திருடர்கள் பதுங்கினர். அவர்களைப் பிடிக்கமுடியா­மல் நூற்­றுக்கணக்­கான போலி­சார் திண­றி­னர்.

இதையடுத்து, டிரோன் என்ற பறக்­கும் கேம­ரா­வின் உத­வி­யு­டன் கொள்­ளை­யர்­கள் தேடப்பட்ட­னர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 500க்கும் மேற்­பட்ட போலி­சார் வர­வ­ழைக்­கப்­பட்­டு, காட்­டுப்­ப­கு­தியில் தேடியபோது கொள்­ளை­யர்­கள் சிக்­கி­னர்.

அப்போது நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவர் ஜார்க்­கண்ட் மாநி­லத்தைச் சேர்ந்­த­ முர்­தர்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவ­ரது கூட்­டா­ளி­ நயீம் ­அக்­தரும் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.